வடக்கின் சேதிகள்


(அடியும் முடியும் இல்லாக்கவிதை)

நாட்கள் வந்துவிட்டன.
தடவும் கரங்கள் எதுமற்று
நான் நிற்கையிலும்
எனைச் சூழ்ந்து முழ்கடிக்க
துயரத்தின் சேதிகள்
காதுக்கெட்டின.
தோன்றிட உருவங்கள்
எதுவுமற்று,
தனித்தே கிடக்கிறதாம்
என் வீட்டு
நிலைக்கண்ணாடி

இனி என்ன எம் கனவுகளிலும்
சிருங்கார ரசம் வழியும்
நடனங்களை மறப்போம்.
எதுவுமற்ற ஊரினில்
நாய்களின்
ஊளையே கீதங்களென
எண்ணி இருப்போம்.

5 comments:

said...

கோசலன்

"தோன்றிட உருவங்கள் எதுவுமற்று,
தனித்தே கிடக்கிறதாம்
என் வீட்டுநிலைக்கண்ணாடி"
இந்த வரிகள் பெரிய துயரத்தை வெளிப் படுத்தி நிற்கின்றன.

இப்படித்தான் பல்லாயிரம் வீடுகளைப் பாழ்படுத்தி அதில் வாழ்தவர்களைத் திசைக்கொருவராகச் சிதறடித்திருக்கிறது இந்த யுத்தம்.

நீண்ட இடைவெளியின் பின்னர் வந்திருக்கிறீர்கள்.எழுத்தைத் தொடருங்கள்

said...

//நீண்ட இடைவெளியின் பின்னர் வந்திருக்கிறீர்கள்.எழுத்தைத் தொடருங்கள்//

நன்றி அக்கா

Anonymous said...

வாழ்த்துக்கள் கோசலன்

//எனைச் சூழ்ந்து முழ்கடிக்க
துயரத்தின் சேதிகள்
காதுக்கெட்டின.//

நந்தினி சேவியரின் வரிகள் ஏற்படுத்திய உணர்வை ஏற்படத்தியது

வரிகள்
......

'வெளியுலகு
திறந்திருக்கும் யன்னல்
சூழவும் நெருக்கும் ஆழ்துயரம்
முடிவுற முடிவுற பிறிதொன்றென
முகிழும் சோகம்
நீரில் அமிழாத் தக்கையென
மேலெழும் வன்மம்"


நட்புடன்
எஸ்.சத்யன்

said...

நன்றி சத்யன், நல்லதோர் கவிதையை பின்னூட்டத்தில் தந்ததிற்கு...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

My Blog List